Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, September 25, 2009

கிராபிக்ஸ் தவறுகள், டைரக்டரு ஷங்கரு, இதுக் கரீக்டா - 2??

முந்தையப் பதிவின் தொடர்ச்சியாய் தமிழ் சினிமாவில் அடுத்த கிராபிக்ஸ் தவறு..

காதலன் படத்தின் 'என்னவளே' பாடலின் ஆரம்பத்தில் வரும் ஒரிஜினல் பிரபுதேவா இங்கே!!

(எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).



கிராபிக்ஸில் உருப்பெறும் அட்டை பிரபுதேவா இங்கே!!



இரண்டுக்கும் உள்ள ஒரு வித்தியாசம்??

முன்புப்போலவே இன்னும் இந்தக் கிராபிக்ஸ்ல என்ன தப்புன்னு கேட்கிறவங்களுக்கு, மூணு விஷயம்.

1. நிழற்படத்தோட தரம் சரியில்லத்தான் (நன்றி: Youtube)..
2. ஒரிஜினல் பிரபுதேவாவேட இடதுப்பக்கம் இருக்கற 'பெயர் முத்திரை/பட்டயம்' (Name/Identity Badge), டூப்ளிக்கேட் அட்டை பிரபுதேவாவில் மிஸ்ஸிங்...
3. இல்லாட்டி, வழக்கம் போல வட்டம் போட்டுக் காட்டிடறது...
4. Youtube பாடல் வீடியோ இங்கே..










இன்னும் தொடரும்...

Saturday, August 22, 2009

உண்மையைச் சொன்னா சண்முகம் கிறுக்கனாம்!!

கண்ட நாள் முதல் படத்தில பிரசன்னாவுக்கும் அவங்க அக்காவுக்கும் நடக்கற Dialogues இது..

பிரியதர்ஷினி: இல்லை, இதுக்குள்ள ரம்யா ஒரு 15 தடவை போன் பண்ணியிருப்பா.. அதுத்தான் கேட்டேன்..

பிரசன்னா : இப்போ என்ன சொல்ல வர்ற நீ?

பிரியதர்ஷினி: பின்ன என்னடா, நீ வருவே, அப்பாடா Saturday, Sunday ஆச்சே. எல்லோரும் குடும்பமா கோவிலுக்கு போகலாம்ன்னு நினைப்பேன்.. Phone வரும், உடனே கிளம்பிடுவே.. என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது..

பிரசன்னா : தெரிஞ்சுக்கறதுக்கு ஒண்ணும் இல்ல, அவ என்னோட Friend, அவ்வளவுத்தான்..

பிரியதர்ஷினி: நிஜமாவா?

பிரசன்னா : என்ன நமட்டுச் சிரிப்பு வேண்டிக் கிடக்கு? அப்பா, காலாக்காலத்துக்கு இவளுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சிருக்கலாம் இல்ல?

பிரியதர்ஷினி: ஆமா, "உண்மையைச் சொன்னா சண்முகம் கிறுக்கனாம்"

இதுல கடைசியா பிரியதர்சினி நக்கலா சொல்ற ஒரு டயலாக்/பழமொழி ரொம்ப யோசிக்க வச்சிடுச்சி.. என்ன Meaning-ன்னு சுத்தமா புரியலை.. யாருக்காவது தெரியுமா?

(4.27-யில் இருந்து)

Wednesday, July 8, 2009

நாடோடிகள் - சில கேள்விகள்



1. எதையும் எதிர்பாராமல், ஒரு பழக்கத்திற்க்காக கொலையை செய்துவிட்டு வாழ்க்கையை தொலைக்கும் மூன்று நண்பர்களின் கதையே 'சுப்ரமணியப்புரம்'. எதையும் எதிர்பாராமல் ஒருக்காதலுக்காக கல்யாணத்தை செய்துவைத்துவிட்டு அதே வாழ்க்கையை தொலைக்கும் மூன்று நண்பர்களின் கதைத்தான் 'நாடோடிகள்'. யாருக்காக வாழ்க்கையை தொலைத்தார்களோ, அவர்களால் ஏமாற்றப்பட்டு, அவர்களையே பழி தீர்க்க முற்படும் அதே மூன்று நண்பர்கள்.. நாயகனை காதலித்து, சுற்றத்தாரால் நிர்பந்திக்கப்பட்டு நாயகனை ஏமாற்றும் நாயகின்னு சமுத்திரக்கனியும் சசியும், சுப்ரமணியப்புரத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் வெளியே வரலையா? படத்துல 'உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு'ன்னு நிறைய தடவை டயலாக் வெச்ச சமுத்திரக்கனி ரொம்ப நேர்மையா இது சுப்ரமணியப்புரம் பாகம்-2 ன்னு ஒத்துக்குவாரா?

2. சசியின் மேல் அவ்வளவு ஆசையாசையாயிருக்கும், சசியின் மாமன் மகளுக்கு வேறொருவருடன் திருமணம் எனும் பொழுதே நமக்கு தெளிவாக புரிந்துவிடுகிறது, இது அவருக்கு கட்டாயத் திருமணம் அப்படீங்கறது.. முதற் பாதியில், சசியோட நண்பர் வேற 'அப்பன் செத்துடுவேன்னு மிரட்டினானா, நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருப்பே' அப்படின்னு ஒரு வசனம் வேற இருக்கு. இவ்வளவு இருந்தும், பிற்பாதியில் மாமன் மச்சான் சண்டை, அவங்கப்பா தூக்கு நாடகம், மாமன் மகள் அழுகை-ன்னு ஏகப்பட்ட இழுவையோட சொன்னது தாய்குலங்களின் அனுதாபத்திற்கோ?

3. கல்யாணம் செஞ்சுக்கிட்டு பஸ்-ல ஏறும் காதலர்களுக்கு போட்டிருக்கிற தங்கச் சங்கிலி, மோதிரம், அப்புறம் மேல, கீழ, சைடுல, அடியில-ன்னு எல்லா பாக்கெட்டுல இருந்தும் எல்லாத்தையும் எடுத்து தர சசியோட பாசம் புல்லரிக்க வைக்குது. ஒருக்கட்டத்துல, எஸ்.வி.சேகர் சொல்றாப்பல, நம்ம சசி ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு போட்டிருக்கிற பனியன் ஜட்டி எல்லாத்தையும் கழட்டி பஸ்-க்குள்ள வீசிடுவாரோன்னு பயமாகிடுச்சு..ஒரு எம்.பியோட பையன்கிட்டயும் தொழிலதிபரோட பொண்ணுக்கிட்டயும் இல்லாத பணமா, இல்ல நகையா? சசி காதலருக்கு ரொம்பவே உதவுராருன்னு சொல்ல இந்த காமெடி சீன் தேவைத்தானா?



4. ஜெயம் படத்தில் சதா ஆரம்பித்து வைத்த டிரெண்ட் இது - வர வர 10-க்கு 7 படங்களில், ஹீரோயினுக்கு ஒரு பாவாடைத் தாவணி, இல்லை புடவையே காஸ்ட்யூம். இப்படத்தில் வரும் சசியின் மாமன் மகளும் 70களின் சரோஜாதேவியைப் போல படம் முழுக்க பாவாடை தாவணியிலேயே வருகிறார். சமீபத்தில், 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' அப்படின்னு ஒரு படத்த பார்த்ததும் தமிழ் சினிமாவை நினைச்சு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. ஒரு மொக்க ஹீரோ + பாவாடை தாவணியில் ஒரு மொக்க ஹீரோயின்னு படம் எடுத்தா எப்படியும் ஓடிடும் ஒரு நம்பிக்கையோ?

5. படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை வசனங்கள் (பொண்ணை நான் பார்க்கணும், எல்லா தெரியும் வெண்ணைங்களா தூங்குங்க), மாமன் மகளின் சின்ன குறும்புத்தனங்கள் (கடலையை வாயில் போட்டுக்கொண்டு மெல்லிய கண்ணடித்தல் - சூப்பர்), ஒரு சில மெல்லிய அதிர்வுகள் (அவங்களுக்கு இந்த இடம் போதும் - இடம்: மாநகராட்சி கழிவறை) என இருந்தும் இரண்டாம் பாதியில் படம் பயங்கர இழுவை. வாழ்க்கையை இழந்த நண்பர்களின் வலியை, இழப்பை இன்னும் கொஞ்சம் நாசூக்காய், சுருக்காய் சொல்லியிருக்கலாமோ?

6. "காதலர்களை சேர்த்து வையுங்கள், ஆனால் அவர்களுக்குள் உண்மையான காதல் இருக்கின்றதா எனப் பார்த்துவிட்டு சேர்த்து வையுங்க" அப்படீங்கறதுதான் படத்தோட மெசேஜ். ஆனால் கடைசிக்காட்சியில் யாரோ ஒருத்தர், காதலர்களை சேர்த்து வைக்க ஆளுங்களை தேத்த, முன்ன பின்ன தெரியாத அந்தக் காதலர்களுக்காக, சசியும் அவரோட தோஸ்த்துக்களும் 'நாங்களும் வரோம்' அப்படீன்னு கிளம்பறது, சமுத்திரக்கனி ஸார், என்னத்தான் சொல்ல வர்றீங்க இந்தப்படத்தில?