Wednesday, October 12, 2011

மனசு..

மனசு..

'காலில்லா தங்கச்சி,
அம்மாக்கு உடம்பு சரியில்ல,
காசுக் குடுங்கய்யா',
என்றவளிடம்,
காசு தரமாட்டேன்,
சாப்பிட வாங்கிக்கோ இங்கேயென,
மூன்று இட்லி வாங்கினேன்..
நன்றி சொல்லி அவள்,
எங்கோ ஓடி மறைந்தாள்...
'ரொம்ப பெரிய மனசு சார்'
என்று ஹோட்டலிலும் பாராட்ட,
ஆட்டோவில் ஏறும்போது தான்
என் பெண் கேட்டாள்..
"மூணுப் பேருக்கு எப்படிப்பா,
மூணு இட்லிப் பத்தும்"?

No comments:

Post a Comment