Saturday, August 22, 2009

உண்மையைச் சொன்னா சண்முகம் கிறுக்கனாம்!!

கண்ட நாள் முதல் படத்தில பிரசன்னாவுக்கும் அவங்க அக்காவுக்கும் நடக்கற Dialogues இது..

பிரியதர்ஷினி: இல்லை, இதுக்குள்ள ரம்யா ஒரு 15 தடவை போன் பண்ணியிருப்பா.. அதுத்தான் கேட்டேன்..

பிரசன்னா : இப்போ என்ன சொல்ல வர்ற நீ?

பிரியதர்ஷினி: பின்ன என்னடா, நீ வருவே, அப்பாடா Saturday, Sunday ஆச்சே. எல்லோரும் குடும்பமா கோவிலுக்கு போகலாம்ன்னு நினைப்பேன்.. Phone வரும், உடனே கிளம்பிடுவே.. என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது..

பிரசன்னா : தெரிஞ்சுக்கறதுக்கு ஒண்ணும் இல்ல, அவ என்னோட Friend, அவ்வளவுத்தான்..

பிரியதர்ஷினி: நிஜமாவா?

பிரசன்னா : என்ன நமட்டுச் சிரிப்பு வேண்டிக் கிடக்கு? அப்பா, காலாக்காலத்துக்கு இவளுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சிருக்கலாம் இல்ல?

பிரியதர்ஷினி: ஆமா, "உண்மையைச் சொன்னா சண்முகம் கிறுக்கனாம்"

இதுல கடைசியா பிரியதர்சினி நக்கலா சொல்ற ஒரு டயலாக்/பழமொழி ரொம்ப யோசிக்க வச்சிடுச்சி.. என்ன Meaning-ன்னு சுத்தமா புரியலை.. யாருக்காவது தெரியுமா?

(4.27-யில் இருந்து)

No comments:

Post a Comment