Wednesday, April 15, 2009

பெண், மனம், காதல் - மூன்றையும் ஏன் படைத்தீர்கள்?

தவம்

ஆளுயர தாடிகொண்ட
கடும் தவத்தினால்
கடவுள் தோன்ற,
சிந்தனை கொண்ட மனிதன்
ஒரு கேள்வியென்றான்..
இருமாப்புடன் கேளென்றார்,
உலகை படைத்த வானவர்..

'பெண், மனம், காதல்,
மூன்றையும் ஏன் படைத்தீர்?',
எனக்கேட்ட மனிதன்முன்
அதிர்ந்து தலைக்குனிந்து,
மெள்ள கடவுள் மறைந்தார்..

கேள்வியுடனான மனிதன்
மீண்டும் தவம்கொள்ள,
முப்பருவம் கடந்தப்பின்
தோன்றினார் கடவுள் ..

அதே கேள்விகளுடன்
கடவுளை நோக்கிய மனிதன்,
அர்த்தம் புரிந்து வீடு திரும்ப,
மனிதனின் தவத்தை தொடர்ந்தார்,
'அடர்ந்த தாடியுடன்' கடவுள்..

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மனிதனின் தவத்தை தொடர்ந்தார்,
'அடர்ந்த தாடியுடன்'
இருந்த கடவுள்.. //

ஆர்யாவைச் சொல்றீங்களா..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//'பெண், மனம், காதல்,
மூன்றையும் ஏன் படைத்தீர்கள்?',//

வசந்த மாளிகை?

Post a Comment