Wednesday, March 4, 2009

என்ன செய்வது இவரை??



எப்பொழுது எங்கு போகிறார், எவரிடமும் சொல்வதில்லை,
எப்பொழுது வீடு திரும்புவார், எவருக்கும் தெரிவதில்லை..

ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைப்பதில்லை,
இருந்த இடத்தில் பொருள்கள் இருப்பதுமில்லை..

நாம் சொல்வதை அவர் கேட்பதுமில்லை.
அவர் சொல்வது நமக்கு புரிவதுமில்லை..

நமது உணவு அவருக்கு பிடிப்பதில்லை.
அவர் உண்பது நமக்கு உணவேயில்லை..

வேலை அசதியினால் நமக்கு தூக்கம்.
அசராமல் தூங்குவதே இவருக்கு விருப்பம்....

இருக்கும் பழைய பொருளை உடைப்பதும்
உடைப்பதற்க்கு புதிய பொருளை கேட்பதும்

3 வயதில் "அவரிடம்" சொல்வதற்கு ஒன்றுமில்லை...

இருப்பினும்
என்ன செய்வது இவரை??

No comments:

Post a Comment